கோவையில் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு புகழ் பெற்ற(?!?) தனியார் பள்ளி இருக்கிறது. இடம் கிடைப்பது குதிரை கொம்புதான். (சிலருக்கு அதெல்லாம் சாதாரணம்). என்ன செய்வது விதி வலியது. நானும் என் மகளுக்கு இடம் வேண்டி விண்ணப்பம் செய்தேன்.
இடம் கிடைத்து விட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. நேர்முகத்தேர்வில் ஓரே ஒரு கேள்வி தான் கேட்டனர், அதுவும் என்னைப் பார்த்து. "இது உங்களுக்கு முதல் குழந்தையா?" நான், "ஆம்" என்றேன். அவ்வளவுதான்.
அப்போதே கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. எதை வைத்து இடம் கொடுத்தார்கள் எனக்கு. வரிசையில் நின்றிருந்த பலருக்கும் இடம் கிடைக்கவில்லை. காரணம்? யாருக்கு தெரியும்.
இந்த வருடம் வேறு பள்ளி பார்த்துக் கொண்டு போய் விடுங்கள் என கூறி விட்டனர். காரணம்? யாருக்கு தெரியும்.
அவர்களெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நான்.....
Thursday, December 06, 2007
தோற்பது நன்று!!!!
நீதிமன்றம் இன்றைக்கு எந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்!!! என் அனுபவத்தையும் பதிவு செய்து வைப்போமே என்று நினைத்ததால் இந்த பதிவு.
என் தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது பாட்டனாரின் சொத்தை மற்ற சொந்தங்களுடன் சேர்ந்து விற்றார். அப்போது அவருக்கு உதவுவதாக(??!!??) சொல்லிக் கொண்ட நபருடன் சேர்ந்து செய்து கொண்ட ஒப்பந்ததில் சிக்கல் ஏற்பட்டு வழக்கு இன்றுவரை நடந்தது. தீர்ப்பு (??!!??) என்னவோ சாதகமாக தான் இருக்கிறது.
ஆனால் அதற்குண்டான பணச்செலவு, அலைச்சல், மனஉளைச்சல் இவையெல்லாம் சொல்லி மாளாது. தீர்ப்பை கேட்டு அவர் சொன்னது:
"இதுக்கு 15 வருடத்திற்கு முன்பே அவனுக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டு நிம்மதியாவாவது இருந்திருக்கலாம்".
பின்குறிப்பு: புதுசா கண்டுபிடிச்சுட்டான்யா என்று சில பேர் முணுமுணுப்பது கேட்கிறது. அட நம்ம அனுபவத்தையும் பதிவு பண்ணி வச்ச பிற்காலத்தில வர்ற மக்கள் பார்த்து அட!! இந்த மாதிரியும் நடந்திருக்கான்னு தெரிஞ்சுக்குவாங்க பாருங்க அதான். :-)
என் தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது பாட்டனாரின் சொத்தை மற்ற சொந்தங்களுடன் சேர்ந்து விற்றார். அப்போது அவருக்கு உதவுவதாக(??!!??) சொல்லிக் கொண்ட நபருடன் சேர்ந்து செய்து கொண்ட ஒப்பந்ததில் சிக்கல் ஏற்பட்டு வழக்கு இன்றுவரை நடந்தது. தீர்ப்பு (??!!??) என்னவோ சாதகமாக தான் இருக்கிறது.
ஆனால் அதற்குண்டான பணச்செலவு, அலைச்சல், மனஉளைச்சல் இவையெல்லாம் சொல்லி மாளாது. தீர்ப்பை கேட்டு அவர் சொன்னது:
"இதுக்கு 15 வருடத்திற்கு முன்பே அவனுக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டு நிம்மதியாவாவது இருந்திருக்கலாம்".
பின்குறிப்பு: புதுசா கண்டுபிடிச்சுட்டான்யா என்று சில பேர் முணுமுணுப்பது கேட்கிறது. அட நம்ம அனுபவத்தையும் பதிவு பண்ணி வச்ச பிற்காலத்தில வர்ற மக்கள் பார்த்து அட!! இந்த மாதிரியும் நடந்திருக்கான்னு தெரிஞ்சுக்குவாங்க பாருங்க அதான். :-)
Subscribe to:
Posts (Atom)