Friday, September 07, 2018

இன்னும் ஏன் இட ஒதுக்கீடு தேவை?

கேள்வி: அது தான் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இல்லாமலேயே பிற சாதிகள் பொதுப்பிரிவு இடங்களை அள்ளுகிறார்களே! இன்னும் ஏன் இட ஒதுக்கீடு தேவை?
பதில்:
பொறியாளர்கள், மருத்துவர்கள், Chartered Accountantகள், அரசு அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், IAS/IPS/IFS அதிகாரிகள், நீதிபதிகள், அறிவியலாளர்கள்... இன்னும் சமூகத்தில் என்னவெல்லாம் உயர் பொறுப்புகள் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் பட்டியல் இடுங்கள்.
இவர்கள் அனைவரும் உங்கள் நெருங்கிய குடும்பத்தில் இருக்கிறார்களா?
என் வீட்டில் இல்லை. என் உறவுகளில் இல்லை. என் ஊரில் இல்லை. இவர்களிலும் பெண்களைப் பார்த்தால் இல்லவே இல்லை.
ஆனால், இவர்கள் அனைவரும் ஆதிக்கச் சாதிகளில் இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த நாட்டின் தலைவிதியை முடிவு செய்கிறார்கள். அது ஒரு போதும் பெரும்பான்மை மக்களின் நலனைக் கருத்தில் கொள்வதாக அமையாது.
இந்த ஆதிக்கம் தலைமுறை தலைமுறையாக பல நூறு ஆண்டுகளாக கல்வி, செல்வம், சமூக மதிப்பு என்று அவர்களுக்குக் கடத்தப்பட்ட சொத்தின் அறிகுறி.
நாம் ஒரு ஆள் மருத்துவமோ பொறியியலோ படித்து வீடோ காரோ வாங்கி செட்டில் ஆகிவிட்டதாக நினைத்துக் கொண்டால், ஒட்டு மொத்த சமூகமும் முன்னேறி விட்டதாகப் பொருள் இல்லை.
என் தாத்தா, பாட்டி படிக்கவில்லை.
என் அப்பா M.Com. அம்மா படிக்கவில்லை.
நான் B.Tech, M.S. என் அக்கா கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை.
என் மகள் மருத்துவரோ அறிவியல் அறிஞரோ ஆகலாம்.
ஆனால், என் பேத்தி வழக்கறிஞர் ஆகும் காலத்திலும் உச்ச நீதிமன்றத்தில் யார் தீர்ப்பு சொல்வார்கள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை யார் தீர்மானிப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
இட ஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்புத் திட்டமோ வறுமை ஒழிப்புத் திட்டமோ அல்ல. அது அதிகாரப் பகிர்வுத் திட்டம். 
அதிகாரம் என்பது பல அடுக்குள் கொண்டது. அதன் அத்தனை அடுக்குகளிலும் அனைத்துச் சாதியினரும் உரிமை பெறும் வரையிலும் இங்கு இட ஒதுக்கீடு என்னும் தத்துவத்திற்கான தேவை இருக்கிறது.

IIT பேராசிரியர்களில் ஆதிக்கச் சாதியினர் தவிர வேறு யாருமே இல்லாமல் இருப்பது எப்படி?

இதோ இப்படி: 

"For subjects in science and technology, posts will be reserved for lecturers and assistant professors. In areas like management, social sciences and humanities, reservations will be applicable up to the professor level. The ministry allows IITs to dereserve the posts after a year, if they do not get filled "despite all efforts". 

அதாவது, ஓராண்டு காலம் கண்துடைப்புக்கு நேர்காணல் நடத்தி விட்டு, தகுதியான ஆளே கிடைக்கவில்லை என்று ஊத்தி மூடி அனைத்து வேலைகளையும் ஆதிக்கச் சாதிகள் எடுத்துக் கொள்வார்கள். 

Refer:
https://timesofindia.indiatimes.com/india/HRD-orders-faculty-quota-IIT-directors-livid/articleshow/3173620.cms

https://indianexpress.com/article/india/president-kovind-expresses-concern-over-poor-representation-of-weaker-sections-in-higher-judiciary-4954196/

https://www.facebook.com/ravidreams/posts/10157860619288569?hc_location=ufi

குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் பெற வேண்டுமா?

கேள்வி:
நான் ஒரு முதல் தலைமுறைப் பட்டதாரி. நான் அரசு தந்த அனைத்து சமூக மேம்பாட்டுத் திட்டங்களாலும் பயன்பெற்றிருக்கிறேன். சத்துணவு திட்டம் தொடங்கி, இலவசப் பேருந்து, பொறியியல் கல்லூரி இட ஒதுக்கீடு, கல்லூரியில் படிப்பு உதவித் தொகை என்று இன்னும் எனக்குத் தெரியாத பல்வேறு திட்டங்களாலும் பயன்பெற்றிருக்கலாம். 
தற்போது, இன்றைய உலகில் நன்கு பணம் சம்பாதிக்கக் கூடிய அளவுக்கு எனக்கு வசதி வாய்ப்புகள் அமைந்துள்ளதாகவே கருதுகிறேன். 
என் கேள்வி என்னவென்றால்: நான் என் குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் பெற வேண்டுமா? அதன் மூலம் வருங்காலத்தில் கல்வி/வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா? 
நான் உயர் நடுத்தர வகுப்பில் இருப்பதல், நான் பொதுப்பிரிவுப் போட்டியில் இருப்பதாகக் கருதி, 20 ஆண்டுகள் கழித்து என் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தாமல் விடலாமா?
அப்படிப் பயன்படுத்தினால், நான் என்னை விட ஏழையான ஒருவரின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாக உணர்கிறேன். 
என் மனசாட்சி எண்ணுவது சரியா? இல்லை, வழக்கமான ஒரு நடுத்தர வகுப்பு ஆளின் மனநிலையுடன் இட ஒதுக்கீட்டைத் தவிர்க்க விரும்புகிறேனா?
என்னால் சரியான சொற்களால் கேட்க முடியவில்லை என்றாலும் என் கேள்வி உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். 
பதில்:
நீங்கள் கட்டாயம் உங்கள் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் பெற வேண்டும். இட ஒதுக்கீட்டையும் பயன்படுத்த வேண்டும். 
ஏன் என்றால், 
இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல. அரசியல் சாசனம் உங்களுக்குத் தந்திருக்கிற உரிமை. அதனைப் பயன்படுத்த கூச்சமோ குற்ற உணர்வோ வேண்டாம். 
இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிக்கும் வேலைவாய்ப்புத் திட்டம் அல்ல. அது அதிகாரத்தைப் பகிர்வதற்கான சட்டம். 
அதனால் தான் அது சமூக “நீதி” என்று அழைக்கப்படுகிறது. 
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உங்கள் முன்னோர்கள் சாதியின் பெயரால் பெற்ற தண்டனைக்கு, உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் இந்த நாடு வழங்கும் நீதி தான் இட ஒதுக்கீடு. 
ஒரு குற்றம் நடக்கிறது. நான் பணக்காரன், அதனால் எனக்கு நீதி வேண்டாம் என யாராவது சொல்வீர்களா? பணத்துக்கும் நீதிக்கும் தொடர்பு இல்லை. 
இந்திய அரசியல் சட்டம் யார் ஒடுக்கப்பட்ட சாதிகள் என்பதை அவர்களின் சமூக நிலை, கல்வி நிலை, பொருளாதார நிலை ஆகிய மூன்றையும் வைத்தே முடிவு செய்கிறது. இதில் சமூக நிலைக்கு அதிக முக்கியத்துவமும், பொருளாதார நிலைக்குக் குறைவான முக்கியத்துவமும் தருகிறது. (தொடர்புடைய செய்திக்கு மறுமொழியைப் பாருங்கள்)
எனவே, ஒரு தலைமுறை படித்து வேலைக்குப் போன உடன் உங்கள் ஒட்டு மொத்த நிலையும் உயர்ந்து விட்டதாக நீங்களே எண்ணிக் கொள்ள வேண்டாம். 
இந்தியாவில் தங்களை நடுத்தர வர்க்கம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பலர் உண்மையிலேயே கீழ் நடுத்தர வர்க்கம் தான் (தொடர்புடைய செய்திக்கு மறுமொழியைப் பாருங்கள்)
உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது? சென்னை, கேரளா போல் ஊழி வெள்ளம் வந்தாலும் உங்கள் சொத்து அழியாமல், குறையாமல் இருக்குமா?
மூன்றாம் உலகப் போரோ உலகப் பொருளாதார மந்த நிலையோ நேர்ந்தால் உங்கள் சொத்து குறையாமல் இருக்குமா?
ஆனால், போர் வந்தாலும் வெள்ளம் வந்தாலும் உங்கள் சாதி மாறாது. சாதிப் பாகுபாடும் மாறாது. (தொடர்புடைய செய்திக்கு மறுமொழியைப் பாருங்கள்)
நீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் ஆகி 80 ஆண்டுகள் வாழ்ந்தாலும், உங்களுக்கு அடுத்து 3 தலைமுறைகள் வந்தாலும் உங்கள் சாதி மாறாது. சாதிப்பாகுபாடும் மாறாது. 
நீங்கள் முன்னேறி விட்டீர்கள் என்று நினைப்பீர்கள். 
ஆனால், புதிதாக நீட் போன்று ஒரு தேர்வு முறையைக் கொண்டு வந்து உங்கள் படிப்பே பயனற்றதாக மாற்றுவார்கள். அப்போது பொதுப் பிரிவில் இடம் கிடைக்காமல் போகக் கூடிய உங்கள் மகனுக்கும் மகளுக்கும் இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கலாம். அந்த வாய்ப்பை நீங்கள் ஏன் மறுக்க வேண்டும்? அது உங்கள் குழந்தையின் உரிமை அல்லவா?
இட ஒதுக்கீடு என்பது உங்கள் பாட்டன்கள் உங்கள் பேரன்களுக்கு அவர்கள் பெயரில் எழுதி விட்டுச் சென்ற சொத்து. அதனைப் பத்திரமாகக் காப்பாற்றி கைமாற்றி விடுவது தான் உங்கள் வேலை. மறுப்பதோ தானம் செய்வதோ உங்கள் வேலை இல்லை. 
இட ஒதுக்கீடு பொதுவாக இரண்டு காரணங்களுக்காகத் தரப்படலாம்:
1. அங்கீகாரம் - இராணுவ வீரர்களுக்கு (அல்லது அவர்கள் வாரிசுகளுக்கு), விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது அல்லவா? இது அவர்களுக்கான அங்கீகாரம். கல்வியில், வேலைவாய்ப்பில், ஏன் நாடாளுமன்றத்தில் கூட இந்த இட ஒதுக்கீடு இருக்கிறது. பல் வேறு திறமைகள், கடமைகள் உள்ளவர்களையும் ஊக்குவிக்க வேண்டும், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இட ஒதுக்கீடு வழங்குகிறார்கள். இது பொதுவாக அளவில் குறைவாக இருக்கும்.
2. அதிகாரத்தில் பிரிதிநிதித்துவம் - சமூகத்தின் உள்ள பல்வேறு மக்களுக்கும் அவர்களின் இருப்புக்குத் தகுந்தவாறு அதிகாரத்தில் பிரிதிநிதித்துவம் வழங்குகிறார்கள். 
உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு. 
தமிழக அரசு வேலைகளில் 30% பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. 
இரயில்களில், பேருந்துகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. 
மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு துறைகளில் இட ஒதுக்கீடு உண்டு.
இவர்கள் யாரும், “ஐயகோ, நான் ஒரு பணக்கார மாற்றுத் திறனாளி அல்லது பெண். எனக்கு இந்த இட ஒதுக்கீடு வேண்டாம்” என்று சொல்வதில்லை. ஏன் என்றால் எவ்வளவு தான் பணம் இருந்தாலும் ஒரு பெண்ணாகவோ மாற்றுத் திறனாளியாகவோ இருக்கும் போது சமூகத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி தான் அந்த இடத்துக்கு வர முடிகிறது என்பது உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. 
அது போன்று தான் சாதியும். சாதி முறையின் இருப்பே இங்கு பல தடைகளை உருவாக்குகிறது. 
உங்கள் பெற்றோர் பட்டம் பெறவில்லை. 
நீங்கள் பொறியியல் பட்டதாரி. 
உங்கள் பெண் மருத்துவரோ CAவோ ஆகலாம். 
உங்கள் பேரன் IAS/IPS/IFS அதிகாரி ஆக வேண்டும். 
உங்கள் கொள்ளுப் பேரன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக வேண்டும். 
அவர்கள் என்ன படிப்பு, வேலைக்குப் போவார்கள் என்று இன்றே உங்களால் முடிவு செய்ய இயலாது. 
அவர்கள் இந்த உயரங்களுக்குச் செல்லும் போது, அவர்களிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்பது ஒரு சிக்கலாகவே இருக்காது. 
இன்னும் இந்தியாவின் நீதித்துறையில், ஊடகங்களில், அதிகார மட்டங்களில் எப்படி சாதிப் பாகுபாடு நிலவுகிறது என்று அறிய மறுமொழிகளில் உள்ள இணைப்புகளைப் பாருங்கள். 
இன்னொன்று, தமிழகத்தில் தான் இட ஒதுக்கீடு சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 
தமிழகம் தாண்டினால், பல மாநிலங்களில், ஒன்றிய அரசில் இட ஒதுக்கீட்டு இடங்களையே சரியாக நிரப்புவதில்லை. 
பொதுப்பிரிவு இடங்கள் முழுதையும் ஆதிக்கச் சாதிகளுக்கான அறிவிக்கப்படாத இட ஒதுக்கீடாக வைத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் தகுதியான ஆள் இல்லை என்று பொய் சொல்லி அவற்றைப் பொதுப் பிரிவுக்கு மாற்றுகிறார்கள். எனவே, நீங்கள் ஒரு இடத்தை விட்டுக் கொடுத்தால், அது உங்கள் பிரிவில் உள்ள இன்னொரு ஏழைக்குத் தான் போய் சேரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 
IITயில் பேராசிரியர் வேலைக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். 
ஒன்று பொதுப்பிரிவில். 
இன்னொன்று உங்கள் சாதிப் பிரிவில். 
பொதுப்பிரிவுக்குக் கட்டாயம் பொதுப்பிரிவு ஆளைத் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
உங்கள் மகனிடம் சாதிச் சான்றிதழ் இருந்து சரியான தகுதியும் இருந்தால், உங்கள் சாதிப் பிரிவிலாவது இடம் தாருங்கள் என்று வழக்கு போட்டு கூட மோதிப் பார்க்கலாம். 
ஆனால், சாதிச் சான்றிதழே இல்லை என்றால் தகுதியான ஆளே கிடைக்கவில்லை என்று அதையும் பொதுப்பிரிவுக்கு மாற்றி இன்னொரு பொதுப் பிரிவு ஆளுக்கு வேலை தருவார்கள். 
இது எல்லாம் கற்பனை இல்லை. ஆதாரத்துக்கு மறுமொழியில் உள்ள இணைப்பைப் பாருங்கள். 
சாதிப்பாகுபாட்டின் காரணமாக உங்கள் பிள்ளைகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களிடம் இட ஒதுக்கீடு என்னும் தடுப்பூசி/insurance தேவை. அவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவைப்படாமல் கூட போகலாம். ஆனால், சாதிச் சான்றிதழை நீங்கள் இப்போது வாங்கி வைக்காமல் விட்டால், அவர்களுக்கு அது தேவைப்படும் காலத்தில் கிடைக்காது. 
உங்களிடம் சாதிச் சான்றிதழ் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கூடுதல் மதிப்பெண்கள் இருந்தால் தானாக பொதுப்பிரிவில் இடம் பிடித்து விடுவார்கள். ஆனால், சாதிச் சான்றிதழ் இருந்தால் தான் இட ஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு பெற முடியும். வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இன்சூரன்ஸ், தடுப்பூசி போல. தக்க சமயத்தில் உதவும். 
நீ போதுமான அளவு முன்னேறிவிட்டாய், உன் மகனுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை என்பது தான் Creamy layer என்னும் சூழ்ச்சி. 
இது என்ன சூழ்ச்சி என்றால், விவசாயி மகன் குமாஸ்தா ஆகலாம். ஆனால், குமாஸ்தா மகன் கலெக்டர் ஆகக் கூடாது என்னும் சூழ்ச்சி. 
இட ஒதுக்கீடு முறையால் அதிகம் பாதிக்கப்படுவது ஆதிக்கச் சாதிகள் தான். அவர்களால் என்றும் இட ஒதுக்கீடு பெற முடியாது. எனவே, இட ஒதுக்கீடு பெறும் உங்களைப் போன்ற மற்ற பிரிவினர்களைக் குழப்பி விட்டு உங்களை எல்லாம் பொதுப்பிரிவுப் போட்டிக்கு இழுத்து விட்டால், இட ஒதுக்கீட்டின் பயன் நீர்த்துப் போகும். 
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கட்சி தொடங்கிய மருத்துவர் கிருஷ்ணசாமி, “இட ஒதுக்கீடு தான் எங்கள் முன்னேற்றத்தைக் கெடுத்தது, எங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவியுங்கள்” என்று முன்வைக்கும் வினோத வேண்டுகோள்கள் எல்லாம் இந்தச் சூழ்ச்சிக்கு ஆளானதால் தான். 
இப்போதும் ஒன்றிய அரசு வேலை, வாய்ப்புகளில் இந்த Creamy layer என்னும் சூழ்ச்சி உள்ளது. 
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தில் Creamy layer கொண்டு வர முயன்று, அடுத்து வந்த தேர்தலில் அதற்கான விலையைக் கொடுத்தார். 
தமிழ்நாட்டு மக்களே தோற்கடித்த ஒரு ஐடியா இது. எனவே, நீங்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம். 
இந்த அதிகார அமைப்பு இருக்கிறதே! ஏழைகளுக்கு உதவ உங்கள் gas மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று விளம்பரம் செய்வார்கள். நீங்களும் அதை நம்பி விட்டுக் கொடுத்து, கூடுதல் விலைக்கு gas வாங்குவீர்கள். அப்புறம் gas விலையும் ஏறிக் கொண்டே போகும். நீங்கள் விட்டுக் கொடுத்த தொகையும் யாருக்குப் போகிறது என்றும் தெரியாமல், அரசு தொடர்ந்து காசை வீணாக்கிக் கொண்டிருப்பதையும் கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் என்று புரிந்து கொள்ளவே நாளாகும். 
அது போல், இந்த creamy layerம் ஒரு சதுரங்க வேட்டை technique. 
என்ன சொன்னாலும் சரி, இன்னமும் குற்ற உணர்வாக இருக்கிறது என்கிறீர்களா?
சமூகத்தில் உண்மையிலேயே பின்தங்கிய, இன்னும் இட ஒதுக்கீட்டின் பயன் போய் சேராமல் இருக்கும் குடும்பங்களுக்கு உரிய வாய்ப்பு தர சரியான முறை ஒன்று உள்ளது. அது தான் உள் ஒதுக்கீடு முறை. 
தமிழ்நாட்டில் மொத்தமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பிரித்துத் தனியே மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பிரிவை உருவாக்கியதும், அருந்ததியர், இசுலாமியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுத்ததும் மிகவும் சரியான நடைமுறைகள். இதையெல்லாம் காலத்தின் தேவை கருதி அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம். 
முதல் தலைமுறைப் பொறியாளராக வந்துள்ள உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டிலும் ஒன்றிரண்டு தலைமுறைகள் ஏற்கனவே பொறியியலாளர்களாக இருந்தவர்களின் பிள்ளைகள் இன்னும் கூடுதல் தன்னம்பிக்கையுடன் கல்லூரி, வேலை இடங்களில் உலவுவதைப் பார்த்திருப்பீர்கள். 
இந்தியாவின் அதிகார அடுக்குகளுக்கு, ஒரு மூன்றாம் தலைமுறை தலித் officerஐக் கையாள்வதை விட முதல் தலைமுறை தலித் officerஐக் கையாள்வது சுலபமானது. அது அதைத் தான் விரும்புகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வலுவான குரல் ஒலிப்பதை அது விரும்புவதில்லை. 
எனவே, இன்னொரு ஏழை மாணவருக்கு வாய்ப்பு பறிபோகுமா என்று கவலைப்படாமல் உங்கள் மகளை அதிகாரம் உலவுகிற அத்தனை இடங்களுக்கும் அனுப்பி வையுங்கள். நீங்கள் சார்ந்து வந்திருக்கும் சமூகத்தின் குரலாக இன்னும் துணிவுடன் ஒலிக்க, அவருக்கு உங்கள் குடும்பம் கடந்த வந்த வரலாற்றையும் சொல்லி வளருங்கள். 
வாழ்த்துகள்

https://www.ibtimes.co.in/high-caste-hindus-refuse-get-into-boat-christian-rescuer-kerala-778355

Friday, May 11, 2018

மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க

மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க என்று கேள்வியோடு வெளியூர் சுற்றுலா செல்லும் மதுரை வாசிகளே! என்ன இல்லை மதுரையில்.

 நீங்கள் ஆன்மீகவாதியா? தொல்லியல் மற்றும் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவரா? மானுடவியல் மீது ஆர்வம் கொண்டவரா? பசுமை மற்றும் பல்லுயிர்கள் மீது ஆர்வம் கொண்டவரா? அட எதுவும் இல்லைங்க, அப்படியே வண்டியெடுத்துட்டு போயி எங்கையாவது ஒரு நகர வாசமற்ற கிராமத்துல தங்கி குளிச்சு கும்மாளம் போடா மதுரையில் இடமிருக்கா என கேட்பவரா? உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதுரை பல்வேறு முகங்களை கொண்டு இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் நீங்கள் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

வரலாற்று மற்றும் தொல்லியல் சிறப்பிடங்கள்:
1. கீழடி
2. அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியம்
3. நரசிங்கப்படி ஈமக்காடு
4. பெருங்காமநல்லூர் நினைவுத்தூண்
5. யானை மலை சமண படுகை
6. கீழக்குயில்குடி மலை அய்யனார் மற்றும் சமண படுகை
7. முத்தப்பட்டி மலை சமணப்படுகை
8. மாங்குளம் - மீனாட்சிபுரம் சமணப்படுகை
9. அரிட்டாபட்டி மலை சமணப்படுகை
10. திருப்பரங்குன்றம் சமணப்படுகை
11. மேட்டுப்படி சித்தர்மலை சமணப்படுகை
12. மாடக்குளம் கண்மாய் கல்தூண்
13. வரிச்சூர் குன்னத்தூர் மலை படுகை
14. விக்கிரமங்கலம் நடுமுதலைக்குளம் மலை சமணப்படுகை
15. அழகர்மலை - கிடாரிபட்டி சமணப்படுகை
16. குப்பல்நத்தம் மலை சமணப்படுகை
17. கருங்காலக்குடி சமணப்படுகை
18. கீழவளவு மலை சமணப்படுகை
19. காரைக்கேணி சமணர் படுகை
20. மலைப்பட்டி புத்தூர்மலை சமணர்படுகை
21. கோவலன் பொட்டல்
22. மருதநாயகம் (கான்சா சாகிப்) கல்லறை, சம்மட்டிபுரம்
23. உச்ச பறம்பு மலை வைரவர் கோவில்
24. ஈசன் கோவில், கருங்காலக்குடி
25. அக்னீஸ்வரன் கோவில், தேவன்குறிச்சி மலை
26.சாப்டூர் அரண்மனை
27.கபாலி மலை கோவில்

கோவில்களும் பழமையான கட்டிடங்களும்:
1. மீனாட்சி அம்மன் கோவில்
2. அழகர் கோவில்
3. திருப்பரங்குன்றம்
4. திருவாதவூர் கோவில்
5. நரசிங்க பெருமாள் கோவில்
6. திருமோகூர் கோவில்
7. கொடிக்குளம் பெருமாள் கோவில்
8. திருவேடகம் கோவில்
9. நாயக்கர் மகால்
10. புதுமண்டபம்
11. ராணி மங்கம்மாள் சத்திரம் (காந்தி அருங்காட்சியகம்)
12. வைகை ஆற்று மைய மண்டபம்
13. நரசிங்கப்பட்டி ராமயண ஓவிய சாவடி
14. விளக்குத்தூன்
15 மதுரை வாயில் கோட்டை
16. காந்தி நிகேதன் ஆசிரமம், கல்லுப்பட்டி

கோவில்காடுகள்:
1. இடையபட்டி கோவில்காடுகள்
2. அ.வளையபட்டி நொண்டி சாமி கோவில்காடு
3. கொடிமங்கலம் முனியாண்டி கோவில்காடு
4.மஞ்சமலை ஆண்டி கோவில்காடு

பெருவிழாக்கள்:
1. சித்திரை திருவிழா
2. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
3. தெப்ப திருவிழா
4. சந்தனகூடு திருவிழா
5. திருப்பரங்குன்றம் கிரிவலம்
6.புட்டுத் திருவிழா

நீராதார தளங்கள்
1. குட்லாடம்பட்டி அருவி
3.கேணி அருவி, சாப்டூர்
4. பரமசிவன் பாறை ஊத்து, சாப்டூர்
5. அழகர்மலை சித்தருவி
6. ராக்காயி தீர்த்தம் (சிலம்பாறு) அழகர்மலை
7. நாகதீர்த்தம், காக்கவூத்து, நாகமலை
8. வண்டியூர் தெப்பக்குளம்
9.  குளிராட்டி அருவி, தே.கிருஷ்ணபுரம் .
10. மொட்டூத்து, தாழையூத்து, வாசிமலை
11. அசுவமா நதி (குதிரை ஆறு) அணை
12. விரகணூர் வைகை அணை
13. நீச்சல்குளம், தல்லாக்குளம்
14. வைகை பெரியார் கால்வாய் (குளிக்க)
15. காளிகாப்பன் கிணறு
16. சாத்தையாறு அணை
17. வையை ஆறு
18. குண்டாறு
19. கமண்டலாறு - வறட்டாறு
20. கிருதுமால் ஆறு
21. உப்பாறு
22. பாலாறு
23. திருமணிமுத்தாறு
24. மஞ்சமலையாறு

மலையேற்றம் செல்ல தோதான மலைகள்:
அழகர்மலை, சிறுமலை, நாகமலை, வகுத்தமலை, மஞ்சமலை, பெருமாள் மலை,  கிளுவமலை, புத்தூர்மலை, வெள்ளிமலை, வெள்ளமலை, கருமலை, மாமலை, குதிரைமலை, தெற்குமலை, வாசிமலை, எழுமலை, பசுமலை, உச்ச பறம்பு மலை, பெருமலை, சிரங்கி மலை, எரிச்சிமலை, கபாலி மலை உள்ளிட்ட மரங்கள் அடர்ந்த மலைகளும், யானைமலை, ஓவாமலை, ஒத்தமலை, பரங்குன்றம், கீழக்குயில்குடி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம், தேவன்குறிச்சி, கொங்கர் புளியங்குளம், முத்துப்பட்டி, சித்தர்மலை, கருங்காலகுடி, வரிச்சூர் குன்னத்தூர், நடுமுதலைக்குளம், குப்பல்நத்தம், கீழவளவு, மேலவளவு, சக்கரைபீர் மலை, பஞ்சபாண்டவர் மலை, புலிப்பட்டி, தேவன்குறிச்சி உள்ளிட்ட குன்றுகளும், கரடுபட்டி கரடு, வடபழஞ்சி கரடு, பெருமாள்மலை கரடு உள்ளிட்ட கரடுகளும் சூழதான் இன்றைய மதுரை மாவட்டம் அமைந்துள்ளது. வனத்துறைக்கு உட்பட்ட மலையேற்றத்திற்கு அனுமதிப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பூங்காக்கள்:
1. ராஜாஜி பூங்கா
2. மதுரை சூழல் பூங்கா, கே.கே.நகர்
3. திருப்பரங்குன்றம் பூங்கா
4. வண்டியூர் கண்மாய் பூங்கா

பழங்குடி மக்கள் இருப்பிடம்:
1. பளியர் மக்கள் - தொட்டப்பநாயக்கனூர், எழுமலை
2. மலைவேடர் - மன்னாடிமங்கலம், வாடிபட்டி
3. காட்டநாயக்கர் - பரவை

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஊர்கள்:
1. சிவர்கோட்டை - நேசநேரி
2. சாப்டூர்
3. மாமலை
4. இடையபட்டி

பறவை காணுதலுக்கு உகந்த நீர்நிலைகள் :
1. சாமநத்தம்
2. கிளாக்குளம்
3. அவனியாபுரம்
4. வடகரை, தென்கரை சோழவந்தான்
5. மாடக்குளம்
6. வரிச்சூர் குன்னத்தூர்
7. மாத்தூர், அரும்பனூர், முதலியேந்தல்
8. சிவரக்கோட்டை மலையூரணி
9. அரிட்டாபட்டி
10. வண்டியூர் கண்மாய்

இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி எடுத்துக்கொண்டு இந்த விடுமுறை நாட்களை குழந்தைகளோடு செலவழிக்க எளிய சுற்றுலாவுக்கு மதுரைவாசிகளே புறப்படுவோமா? போகிற வழியில் பதநீர், கூழ் குடித்து கொண்டு, கட்டிய சோத்த  அல்லது வாங்கின சோத்து பொட்டினத்த மரத்தடியில் உட்கார்ந்து ருசிப்பது என ஊர் சுற்றலை இன்னும் அழகாக்கி கொள்ளுங்கள். சொந்த ஊரை தெரிந்து வைத்திருப்பது சொர்க்கத்தின் முகவரியை கையில் வைத்திருப்பதற்கு சமம். எளிய மக்களுக்கான எளிய சுற்றுலா உள்ளூரை வட்டமடிப்பதில் இருந்து துவங்குகிறது. வாங்க போவோம்.

Received in WhatsApp share.

Sunday, December 17, 2017

கேள்விகள்

பொதுவெளியிலும், நண்பர்களிடமும் எதிக்கொள்ளும் கேள்விகள். ஓரளவுக்கு இதற்கான பதில் எனக்கு தெரிந்தாலும், எல்லா கேள்விகளையும் தொகுத்து ஒரே இடத்தில் சுருக்கமான தெளிவான விடைகளை பதிவு செய்து வைத்தால் பலனளிக்கும் என்பதால் இந்த முயற்சி.

மதம்

  1. இந்து மதத்தை மட்டும் ஏன் விமர்சனம் வைக்கிறீர்கள்? மற்ற மதங்களில் எந்த குற்றமும் இல்லையா?
  2. இந்து மதத்தில் சாதி இருப்பது போல் மற்ற மதங்களில் பிரிவினை இருக்கிறதே?
  3. ரம்சானுக்கு மட்டும் கலைஞர் வாழ்த்து சொல்கிறாரே?
  4. பிராமணர்கள் மட்டும் தான் கோவில் கருவறைக்குள் செல்லலாம் என்பது எங்கள் நம்பிக்கை. அதை கேள்வி கேட்க நீங்கள் யார்?
  5. ஒரு சாராரின் நம்பிக்கைகளை இழித்து பேசுவது சரியா?
  6. மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் கலைஞர் ஏன் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை?

சாதி

  1. அந்த காலத்தில் சாதி இருந்தது. இப்போது சாதி எங்கே இருக்கிறது? இல்லாத பிரச்சனையை கொண்டு சமூக அமைதியை ஏன் கெடுக்கிறீர்கள்?
  2. பிராமணர்கள் எந்த வன்முறையிலும் இறங்கியதாக செய்திகளே இல்லை. ஆனால் அவர்களை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்?
  3. மிகக்குறைந்த மக்கட்தொகை கொண்ட பிராமணர்களை ஏன் எதிர்க்கிறீர்கள்? அவர்களா சாதி வன்முறையில் ஈடுபடுகிறார்கள்?

இடஒதுக்கீடு

  1. இடஒதுக்கீடு இருப்பதால் தரம் குறையாதா?
  2. செல்வந்தர்களுக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தருவது சரியானது தானா?
  3. இடஒதுக்கீட்டினால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மேல் சாதியினர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தான் சரியானது.
  4. இத்தனை ஆண்டு காலமாக இடஒதுக்கீடு கொடுத்தாயிற்று. இனியும் எத்தனை காலத்திற்குத் தான் கொடுக்க முடியும். எனவே இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.
  5. ஓட்டு வாங்கத் தானே இடஒதுக்கீடு பயன்படுகிறது. அதனால் என்ன நன்மை விளைந்தது?
  6. இடஒதுக்கீடு என்பதை பிரிவினையை ஏற்படுத்துகிறது. தகுதி இருப்போருக்கு முன்னுரிமை என்பது தானே சரியானது?
  7. சாதி ஒழிய வேண்டும் ஆனால் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மட்டும் வேண்டுமா?

மொழி

  1. தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா?
  2. வேற்று நாட்டு மொழியான ஆங்கிலத்தை முன்னிறுத்தி நமது தேசிய மொழியான இந்தியை எதிர்ப்பது ஏன்? தேசிய மொழியான இந்தியை எதிர்த்து, அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வது அடிமை மனநிலை இல்லையா?
  3. தேசிய மொழியான இந்தியை எதிர்ப்பது ஏன்? தேசத்தை ஏற்றுக் கொண்டு இங்கு வாழ்பவர்கள், தேசியமொழியை கற்க மறுப்பது ஏன்? பிடிக்காவிட்டால் வெளியேறி விட வேண்டியது தானே?
  4. மதத்தை உயர்த்தி பிடிப்பது மதவாதம் என்றால், ஒரு மொழியை உயர்த்தி பிடிப்பது மொழி வாதம் ஆகாதா?
  5. தலைவர்களின் குழந்தைகள் இந்தி மொழி படிக்கும் போது மற்றவர்களை எதிர்க்க சொல்வது ஏன்?

கடவுள் மறுப்பு

  1. உங்கள் வீட்டில் இருப்பவர்களே கடவுளை நம்பும் போது மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது ஏன்?
  2. கடவுளை இல்லை என்போருக்கு கோவிலைப் பற்றியும், இந்துக்களைப் பற்றியும் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்?
  3. நாத்தீகர்களின் விமர்சனத்தினால் இந்துக்களின் மனம் புண்படுகிறது!
  4. நாத்தீகர்கள் அறிவுஜீவிகள் என தம்மைத்தாமே நினைத்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்கிறார்களா?
  5. நம்பிக்கைகளை கேலி செய்யும் நீங்கள் அறிவியலில் எல்லாவற்றிற்கும் விடை இருப்பதாக கருதுவது சரிதானா?
  6. அறிவியலில் கோளாறுகளே இல்லையா? அறிவியல் சொல்வது எல்லாம் சரியா? அறிவியலால் தீமைகளே ஏற்படவில்லையா?
  7. இவ்வுலகத்தில் கடவுளை நம்புபவர்களே அதிகம். நாத்தீகம் தான் சரி என்றால் ஏன் பெரும்பாலனோர் அதை நம்பவில்லை?

அரசியல்

  1. படிக்காத அரசியல்வாதிகள் நாட்டையே கெடுத்து விட்டார்கள். எனவே மிகவும் நன்றாக படித்தவர்களுக்கு மட்டுமே அரசியல் அதிகாரத்தை கொடுக்க வேண்டும். 

Tuesday, November 03, 2009

பேசாம பேசாம இருந்து

http://www.youtube.com/watch?v=q2KfPr8PD4M

பேசாம பேசாம இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
அட தோழா, ரொம்ப‌ நாளா.
பேசாம பேசாமத்தான் இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
கேக்காம கேக்காம இருந்து.
நாம போனமடா சூடு, சொரனை மறந்து.
இப்போ போகுதடா கோவணமும் பறந்து.
வெளஞ்ச பயிறு அறுவடைக்கு விளஞ்சு நிக்கிது.
உழச்ச வயிறு உணவில்லாம காஞ்சு கிடக்குது.
அடிக்கும்போது ,புழுவும் கூட எழுந்து துடிக்குது.
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது.
அட தோழா, ரொம்ப‌ நாளா.
பேசாம பேசாமத்தான் இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
வருஷம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது.
அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது.
எரியும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது.
உசுரு இருந்தும் உம்முதுகு குனிஞ்சு நிக்குது.
அட தோழா, ரொம்ப‌ நாளா.
பேசாம பேசாமத்தான் இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
கேக்காம கேக்காம இருந்து.
நாம போனமடா சூடு, சொரனை மறந்து.

Monday, November 02, 2009

இதயத்திலிருந்து நேரடியாக - சீமான் (மீள்பதிவு)

http://www.keetru.com/literature/interview/seemaan.php

எந்த பார்ப்பான் ஐந்து ஏக்கர் நிலம் வைச்சு விவசாயம் பார்க்கறான்? உனக்கு சோறு எவன் போடறான்? இளையான்குடியில் வேலை பார்க்கிற எங்க அப்பனும் ஆத்தாளும் உனக்கு அனுப்பறான் அரிசியும், சோறும், வெங்காயமும், கத்தரிக்காயும். அதைத் தின்னுட்டு நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா என்ன அர்த்தம்? நான் கேட்கிறேன், கடவுளை வணங்குவது ஒரு தொழிலா? ஒரு மணிநேரம் வணங்கிட்டு வந்து வயக்காட்டுலே உழைடா. நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா உங்களுக்கு யாரு சோறு போடறது? வந்து வேலை செய். குறைஞ்சபட்சம் சுத்தியிருக்கிற செடிகளுக்காவது தண்ணியை ஊத்து. உழைக்காம சாப்பிடணும், எல்லாராலயும் மதிக்கப்படணுங்கிறதுக்காக வேஷத்தை போட்டுட்டு நீங்க எங்களை ஏமாத்தறீங்க. இன்னும் எத்தனை காலத்துக்குப் பொறுத்திட்டிருக்கிறது இந்த ஏமாத்து வேலையை?

இந்து மதம்னா என்ன, அது இங்க இருந்ததா, அது வெள்ளைக்காரன் எழுதினது. வெள்ளைக்காரன் நிர்வகிக்கும்போது இங்க இருக்கிற குறுநிலங்களை எல்லாம் ஒருங்கிணைச்சு அவன் தான் இந்தியான்னு பேர் வைக்கிறான். இந்தியாவில் உள்ள கிறித்தவன், இஸ்லாமியன், பார்சி போக மீதியுள்ளவன் இந்துன்னு அவன் தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில எழுதினான். அதுக்கு முன்னாடி இந்தியாவுலே மதம் இருந்தது. புத்தமதத்தை புத்தர் தோற்றுவிச்சார். அந்த மாபெரும் மேதையை அடிச்சு விரட்டுன ஒரு பாவத்துக்காவது இந்த இந்து மதம் அழிஞ்சு போகட்டுங்கிறேன் நான்.

என் மண்ணில் தோன்றிய ஒரு மாபெரும் ஞானியை நீங்க துரத்திட்டீங்க. இன்னிக்கு இலங்கையிலயும், சிங்கப்பூர்லயும் புத்தர் இருக்கிறார். ஒலிம்பிக்கில் தங்கத்தை வாங்கிக் குவிக்கறான் அவன். அவனோட ஓடமுடியுமா உங்களால. ஏன்னா புத்த மதம் ஒழுக்கத்தை போதிக்குது, தியானம் சொல்லித் தருது, உடற்பயிற்சி கலைகளை, வீரக்கலைகளையும் பிறப்பில் இருந்து கத்துக்கச் சொல்லுது. அப்பேர்ப்பட்ட மதத்தைத் தோற்றுவித்த மகானை நாட்டை விட்டே துரத்திட்டு, பெத்லகேம்ல ஆசாரி வேலை பார்த்துட்டிருந்த இயேசுநாதரையும், அரபு நாட்டில பேரீச்சம்பழக் காட்டில ஒட்டகம் மேய்ச்சிட்டிருந்த நபிகளையும் கோவில் கட்டி கும்பிடறாங்க. என் மண்ணில் தோன்றிய புத்தமதம் உலகம் பூராவும் இருக்கு, என் மண்ணில் இல்லையே ஏன்? இவர்கள் (பார்ப்பனர்கள்) செய்த சதி. அவன் கடவுள் இல்லைன்னு போதிச்சான், அறிவே கடவுள்னு சொன்னான். அய்யய்யோ நம்ம பொழைப்புக்கு வேட்டு வைக்கிறான்னேன்னு பயந்துட்டு அவன் மதத்தை இந்தியாவிலே இருந்தே துரத்திட்டாங்க.

சும்மா இந்து, இந்துன்னு குதிக்கக்கூடாது. சரி இருக்கட்டும். மதம் மாறின எல்லாரையும் மறுபடியும் இந்து மதத்துக்கே கூட்டிட்டு வருவோம். நீ எந்தச் சாதியில சேர்த்துப்ப? அப்பவும் தலித்தாத்தானே இருப்பான். அந்த மயித்துக்கு அவன் அங்கேயே இருந்துட்டுப் போகட்டுமே. உனக்கு இதில என்னப் பிரச்சனை? ஓட்டுப் போயிடும். அதுதானே காரணம்.

http://www.keetru.com/literature/interview/seemaan.php

Wednesday, October 21, 2009

உன்னைப் (??!!??) போல் ஒருவன்

Real Names
  • Kamal Haasan
  • Lakshmi
  • Shruti Haasan
  • Anuja Iyer
  • Ganesh Venkatraman
  • Bombay Jayashree

Character Names (Police)
  • Raghavan Maraar
  • Sethuraman

Character Names (Terrorists)
  • Abdullah
  • Inayadullah
  • Ahamadullah and
  • Karamchand Lala

Music
  • Shruti Haasan (Kamal's daughter)

Lyrics
  • Kamal Haasan (3)
  • Manyusha Puthran (1)

Singers
  • Kamal Haasan (3)
  • Shruti Haasan (2)
  • Bombay Jayashree (1)
  • Akshara Haasan, Subbalakshmi, Krishnan Swaminathan & (Bala, Mira, Tara, Aiden, Satish, Leo)
-1
My comments.... hehehe

எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் ஏதாவது ஒன்றை பற்றி உங்களுக்கு நினைவு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.

சேட்டன்களின் சேட்டை

30 மாநிலங்களையும், 3 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட மத்திய அரசின் செயலகங்களா? அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகமா? என்று பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு, இன்றைக்கு டெல்லியில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் நிரம்பி வழிகிறார்கள்.

இந்தியாவா? அல்லது கேரள தேசமா? என்று எண்ணும் அளவுக்கு மலையாள மொழி பேசுகிற கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்தின்படி நாட்டின் முதல்குடிமகனாக விளங்குபவர் குடியரசு தலைவர். இப்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபா பட்டிலுக்கு செயலாளராக இருப்பவர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், பதவியிலிருந்து ஓய்வு பெறும் வயதை தாண்டிய இவருக்கு 4 ஆண்டுகள் பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டு பிரதீபா பட்டில் பதவியில் இருக்கும் வரையில், இவரும் செயலாளராக பதவியில் நீடிப்பார் என்ற நிலமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.

குடியரசு தலைவருக்கு அடுத்ததாக ஆட்சி தலைவராக இருப்பவர் பிரதமர். பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக இருப்பவர் டி.கே. நாயர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விளக்கத் தேவையில்லை.

பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், ஆட்சியை வழி நடத்திச் செல்பவராகவும் விளங்கி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செயலாளராக இருப்பவர் வின்சென்ட் ஜார்ஜ். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.

மாநிலங்களில் எப்படி தலைமைச் செயலாளர் பதவி இருக்கிறதோ, அதைப் போன்று மத்தியில் இருப்பது அமைச்சரவைச் செயலாளர் பதவி. இப்போது அமைச்சரவை செயலாளராக இருப்பவர் கே.எம். சந்திரசேகர், இவருக்கு அடுத்தபடியாக உள்துறை செயலாளராக இருப்பவர் சி.கே. பிள்ளை. செல்வாக்கும், அதிகாரமும் மிக்க இருவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள்.

வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா மேனன் ராவ், தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ், விவசாயம் மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் நந்தகுமார், சிவில் விமானப் போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார்,

செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ரகு மேனன், நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ராமச்சந்திரன், ஜவுளிச் துறை செயலாளர் ரீட்டா மேனன், கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் கங்காதரன்,

குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழி பேசுகிற அதிகாரிகள்.

எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் எம்.கே.நாராயணன் நாயர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் மாதவன் நாயர் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

தமிழ்நாட்டிலிருந்தும் 2 அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு போயிருக்கிறார்கள். அந்த இருவரும் கூட கேரளாவை சொந்த மாநிலமாகக் கொண்டவர்கள் தான்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு அதிகாரி தான் இப்போது மத்திய அரசில் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.

மத்தியில் இணை அமைச்சராக இருக்கும் ஒருவர் (ஜெய்ராம் ரமேஷ்) மிகத் துணிச்சலாக தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் மதிக்காமல், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரளாவிற்கு அனுமதி அளிக்கிறார் என்றால், அந்தத் துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது?.

மத்தியில் ஆளுகின்ற கூட்டணி ஆட்சியில் முக்கியக் கூட்டணிக் கட்சி ஆட்சி நடத்துகின்ற தமிழகத்திற்கு பாதகமாகவும், எதிர்க்கட்சி ஆட்சி நடக்கிற கேரளத்திற்குச் சாதகமாகவும் முடிவெடுக்கும் துணிச்சலை அவருக்கு கொடுத்தது யார்?.

அவர் வெறும் பொம்மை தான். அவருக்கு சாவி கொடுத்து செயல்பட வைத்திருப்பவர்கள் யார்? என்பதை துணிந்து அறிவிக்க முதல்வர் முன்வர வேண்டும்.

http://thatstamil.oneindia.in/news/2009/10/21/tn-malayalis-are-ruling-the-nation-says-ramdoss.html

Monday, October 12, 2009

மகாத்மா பெரியார்

13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. "விடுதலை' 20.4.1955

"உலக உத்தமர்' என்ற காந்தியாரே சூத்திரன்தான். அவரும் தன்னை அடிக்கடி "நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வார். அப்படிப்பட்ட "மகாத்மாவே' ஜாதியைப் பற்றிச் சிந்தித்தாரா? அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பச்சையாகவே ""நான் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே வந்தேன்; ராமராஜ்யத்தை நிலைநாட்டுவதே என் நோக்கம்'' என்று கூறினார். அதற்கென்று மக்களை எல்லாம் ராமபஜனை செய்யச் சொன்னார். அதனால்தான் பார்ப்பனர் எல்லாரும் கூடி, அவருக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தனர். இல்லையேல், அவர் இதுவரையாவது உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

Ambedkar நானும் "மகாத்மா' ஆக முடியும். இன்றைக்கே ""பார்ப்பனர் எல்லாரும் சாட்ஷாத் பூதேவர்கள்; மதம் அவசியம் வேண்டும், கடவுள் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அவசியம் பார்ப்பனர்கள் எல்லாக் கோயிலுக்கும் மணியாட்டத்தான் வேண்டும். இல்லையேல் உலகமே நாசமாய்ப் போய்விடும்'' என்று, இன்றைக்கு இக்கூட்டத்திலேயே பேசினால் போதுமே! உடனே தந்திமேல் தந்தி பறக்கும்; இங்குள்ள பார்ப்பனர் எல்லாரும் உடனே திரு. காமராசருக்குத் தந்தி கொடுப்பார்கள்; உடனே அவர் மத்திய அரசாங்கத்துக்கு "இங்கு இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ. ராமசாமி பக்தராகிவிட்டார். அதுவும் என்னுடைய ஆட்சியில் அவர் கொள்கைகள் மாற்றப்பட்டன'' என்று ஒரு வரி அதிகம் கொடுத்தால், உடனே எனக்கு மறுகணமே "மகாத்மா ராமசாமி' என்று கூப்பிட உத்தரவிடுவார்கள்! அங்கிருந்து ""ராமசாமிக்கு ஒரு மந்திரி வேலை வேண்டுமா? இரண்டு மந்திரி வேலை வேண்டுமா? என்று கேள்!'' என்று பதில் வரும்.

ஆனால், நான் மற்றவர்களைப் போல் எண்ணமில்லாதவனாகையால், என்னுடைய வாழ்நாளில் ஏதும் பொதுத் தொண்டினைச் செய்தாக வேண்டும் என்று, நம் திராவிட மக்களுக்கென்று இக்காரியத்தில் ஈடுபட்டு, கடந்த 30 ண்டுகளாகப் பற்பல எதிர்ப்புகளுக்கிடையிலும் கஷ்டங்களுக்கிடையிலும் துணிந்து செய்து வருகிறேன்.