கோவையில் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு புகழ் பெற்ற(?!?) தனியார் பள்ளி இருக்கிறது. இடம் கிடைப்பது குதிரை கொம்புதான். (சிலருக்கு அதெல்லாம் சாதாரணம்). என்ன செய்வது விதி வலியது. நானும் என் மகளுக்கு இடம் வேண்டி விண்ணப்பம் செய்தேன்.
இடம் கிடைத்து விட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. நேர்முகத்தேர்வில் ஓரே ஒரு கேள்வி தான் கேட்டனர், அதுவும் என்னைப் பார்த்து. "இது உங்களுக்கு முதல் குழந்தையா?" நான், "ஆம்" என்றேன். அவ்வளவுதான்.
அப்போதே கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. எதை வைத்து இடம் கொடுத்தார்கள் எனக்கு. வரிசையில் நின்றிருந்த பலருக்கும் இடம் கிடைக்கவில்லை. காரணம்? யாருக்கு தெரியும்.
இந்த வருடம் வேறு பள்ளி பார்த்துக் கொண்டு போய் விடுங்கள் என கூறி விட்டனர். காரணம்? யாருக்கு தெரியும்.
அவர்களெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நான்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment