கடவுளுக்கு 100 தேங்காய் உடைத்தால் தன்னை பாசாக்கி விடுவார் என்று நினைக்கும் மாணவனுக்கு ஆன்மீகவாதிகள் தரும் ஆலோசனை என்ன வென்றால், ஆண்டவன் உங்களுக்காக தேர்வெழுத மாட்டார், நீங்கள் படிக்க வேண்டும், நீங்கள் தான் தேர்வு எழுத வேண்டும்.
இது எப்படி இருக்கு...
நானே தான் படிக்க வேண்டும், நானே தான் தேர்வையும் எழுத வேண்டும். !!!!
கடவுளை வேண்டுவதால் எனக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டு நன்றாக படித்து தேருவேனாம்...
காரியம் நிறைவேற காரணம் நானாகவும் உந்து சக்தியாக கடவுளும் இருக்கும் போது இதில் யார் உன்னதமானவர் நானா? இல்லை கடவுளா?
காரியம் செய்பவனே உயர்ந்தவன் என்பது என் கருத்து... மேலும் கடவுளாக வந்து நானே உயர்ந்தவன் என்று போட்டோவுக்கு போஸ் கொடுத்ததேயில்லை என்பது கூடுதல் தகவல். :-))
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment