“யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?”
ஒரு சின்ன உதாரணம்.
இன்று இரவு எல்லாரும் தூங்கின பிறகு மழை பெய்கிறது. விடிவதற்குள் ஈரம் முழுக்கக் காய்ந்து விடுகிறது. அந்த மழை பெய்தது யாருக்காவது தெரியுமா? நேற்று மழை பெய்ததா என்று யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். அல்லது தெரியாது என்று சொல்வார்கள். அப்போது இந்த உலகத்தைப் பொறுத்த வரை அப்படி ஒரு மழையே பெய்யவில்லை.
அப்போது என்ன தெரிகிறது?
ஒரு காட்சி அங்கீகரிக்கப் பட காண்பவர்கள் தேவைப் படுகிறார்கள்.
காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்.
காண்பவன் இல்லையேல், காட்சி இல்லை.
No comments:
Post a Comment