Sunday, July 22, 2007

யார் கழுதை?

நேற்று குழந்தையை அவள் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். சிக்னலில் எதிர்புறம் நின்று கொண்டிருந்தது அந்த பாவப்பட்ட கழுதை.

அதன் இரு முன்புற கால்கள் கட்டப்பட்டு எப்படியோ சாலையின் நடுவில் வந்து நின்று கொண்டிருந்தது. எல்லா வாகனங்களும் அதன் மேல் இடித்துவிடாமல் மிகவும் கவனமாக சென்று கொண்டிருந்தன.

யாராவது இடித்து கொன்றால் உடனே தன் துன்பங்களிலிருந்து விடுதலை என்று சொல்வது போலிருந்தது அதன் கண்களைப் பார்த்த போது.

ஏன் யாருமே கழுதையை ஒரு உயிராக மதிப்பதில்லை? என் குழந்தை இதுவரை கழுதையை நேரில் பார்த்ததே இல்லை. இனிமேலும் பார்க்கவே முடியாதோ?

No comments: