Tuesday, November 03, 2009
பேசாம பேசாம இருந்து
http://www.youtube.com/watch?v=q2KfPr8PD4M
பேசாம பேசாம இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
அட தோழா, ரொம்ப நாளா.
பேசாம பேசாமத்தான் இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
கேக்காம கேக்காம இருந்து.
நாம போனமடா சூடு, சொரனை மறந்து.
இப்போ போகுதடா கோவணமும் பறந்து.
வெளஞ்ச பயிறு அறுவடைக்கு விளஞ்சு நிக்கிது.
உழச்ச வயிறு உணவில்லாம காஞ்சு கிடக்குது.
அடிக்கும்போது ,புழுவும் கூட எழுந்து துடிக்குது.
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது.
அட தோழா, ரொம்ப நாளா.
பேசாம பேசாமத்தான் இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
வருஷம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது.
அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது.
எரியும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது.
உசுரு இருந்தும் உம்முதுகு குனிஞ்சு நிக்குது.
அட தோழா, ரொம்ப நாளா.
பேசாம பேசாமத்தான் இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
கேக்காம கேக்காம இருந்து.
நாம போனமடா சூடு, சொரனை மறந்து.
பேசாம பேசாம இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
அட தோழா, ரொம்ப நாளா.
பேசாம பேசாமத்தான் இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
கேக்காம கேக்காம இருந்து.
நாம போனமடா சூடு, சொரனை மறந்து.
இப்போ போகுதடா கோவணமும் பறந்து.
வெளஞ்ச பயிறு அறுவடைக்கு விளஞ்சு நிக்கிது.
உழச்ச வயிறு உணவில்லாம காஞ்சு கிடக்குது.
அடிக்கும்போது ,புழுவும் கூட எழுந்து துடிக்குது.
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது.
அட தோழா, ரொம்ப நாளா.
பேசாம பேசாமத்தான் இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
வருஷம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது.
அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது.
எரியும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது.
உசுரு இருந்தும் உம்முதுகு குனிஞ்சு நிக்குது.
அட தோழா, ரொம்ப நாளா.
பேசாம பேசாமத்தான் இருந்து.
கோழிக் குஞ்சுகளத் தூக்குதடா பருந்து.
கேக்காம கேக்காம இருந்து.
நாம போனமடா சூடு, சொரனை மறந்து.
Monday, November 02, 2009
இதயத்திலிருந்து நேரடியாக - சீமான் (மீள்பதிவு)
http://www.keetru.com/literature/interview/seemaan.php
எந்த பார்ப்பான் ஐந்து ஏக்கர் நிலம் வைச்சு விவசாயம் பார்க்கறான்? உனக்கு சோறு எவன் போடறான்? இளையான்குடியில் வேலை பார்க்கிற எங்க அப்பனும் ஆத்தாளும் உனக்கு அனுப்பறான் அரிசியும், சோறும், வெங்காயமும், கத்தரிக்காயும். அதைத் தின்னுட்டு நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா என்ன அர்த்தம்? நான் கேட்கிறேன், கடவுளை வணங்குவது ஒரு தொழிலா? ஒரு மணிநேரம் வணங்கிட்டு வந்து வயக்காட்டுலே உழைடா. நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா உங்களுக்கு யாரு சோறு போடறது? வந்து வேலை செய். குறைஞ்சபட்சம் சுத்தியிருக்கிற செடிகளுக்காவது தண்ணியை ஊத்து. உழைக்காம சாப்பிடணும், எல்லாராலயும் மதிக்கப்படணுங்கிறதுக்காக வேஷத்தை போட்டுட்டு நீங்க எங்களை ஏமாத்தறீங்க. இன்னும் எத்தனை காலத்துக்குப் பொறுத்திட்டிருக்கிறது இந்த ஏமாத்து வேலையை?
இந்து மதம்னா என்ன, அது இங்க இருந்ததா, அது வெள்ளைக்காரன் எழுதினது. வெள்ளைக்காரன் நிர்வகிக்கும்போது இங்க இருக்கிற குறுநிலங்களை எல்லாம் ஒருங்கிணைச்சு அவன் தான் இந்தியான்னு பேர் வைக்கிறான். இந்தியாவில் உள்ள கிறித்தவன், இஸ்லாமியன், பார்சி போக மீதியுள்ளவன் இந்துன்னு அவன் தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில எழுதினான். அதுக்கு முன்னாடி இந்தியாவுலே மதம் இருந்தது. புத்தமதத்தை புத்தர் தோற்றுவிச்சார். அந்த மாபெரும் மேதையை அடிச்சு விரட்டுன ஒரு பாவத்துக்காவது இந்த இந்து மதம் அழிஞ்சு போகட்டுங்கிறேன் நான்.
என் மண்ணில் தோன்றிய ஒரு மாபெரும் ஞானியை நீங்க துரத்திட்டீங்க. இன்னிக்கு இலங்கையிலயும், சிங்கப்பூர்லயும் புத்தர் இருக்கிறார். ஒலிம்பிக்கில் தங்கத்தை வாங்கிக் குவிக்கறான் அவன். அவனோட ஓடமுடியுமா உங்களால. ஏன்னா புத்த மதம் ஒழுக்கத்தை போதிக்குது, தியானம் சொல்லித் தருது, உடற்பயிற்சி கலைகளை, வீரக்கலைகளையும் பிறப்பில் இருந்து கத்துக்கச் சொல்லுது. அப்பேர்ப்பட்ட மதத்தைத் தோற்றுவித்த மகானை நாட்டை விட்டே துரத்திட்டு, பெத்லகேம்ல ஆசாரி வேலை பார்த்துட்டிருந்த இயேசுநாதரையும், அரபு நாட்டில பேரீச்சம்பழக் காட்டில ஒட்டகம் மேய்ச்சிட்டிருந்த நபிகளையும் கோவில் கட்டி கும்பிடறாங்க. என் மண்ணில் தோன்றிய புத்தமதம் உலகம் பூராவும் இருக்கு, என் மண்ணில் இல்லையே ஏன்? இவர்கள் (பார்ப்பனர்கள்) செய்த சதி. அவன் கடவுள் இல்லைன்னு போதிச்சான், அறிவே கடவுள்னு சொன்னான். அய்யய்யோ நம்ம பொழைப்புக்கு வேட்டு வைக்கிறான்னேன்னு பயந்துட்டு அவன் மதத்தை இந்தியாவிலே இருந்தே துரத்திட்டாங்க.
சும்மா இந்து, இந்துன்னு குதிக்கக்கூடாது. சரி இருக்கட்டும். மதம் மாறின எல்லாரையும் மறுபடியும் இந்து மதத்துக்கே கூட்டிட்டு வருவோம். நீ எந்தச் சாதியில சேர்த்துப்ப? அப்பவும் தலித்தாத்தானே இருப்பான். அந்த மயித்துக்கு அவன் அங்கேயே இருந்துட்டுப் போகட்டுமே. உனக்கு இதில என்னப் பிரச்சனை? ஓட்டுப் போயிடும். அதுதானே காரணம்.
http://www.keetru.com/literature/interview/seemaan.php
எந்த பார்ப்பான் ஐந்து ஏக்கர் நிலம் வைச்சு விவசாயம் பார்க்கறான்? உனக்கு சோறு எவன் போடறான்? இளையான்குடியில் வேலை பார்க்கிற எங்க அப்பனும் ஆத்தாளும் உனக்கு அனுப்பறான் அரிசியும், சோறும், வெங்காயமும், கத்தரிக்காயும். அதைத் தின்னுட்டு நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா என்ன அர்த்தம்? நான் கேட்கிறேன், கடவுளை வணங்குவது ஒரு தொழிலா? ஒரு மணிநேரம் வணங்கிட்டு வந்து வயக்காட்டுலே உழைடா. நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா உங்களுக்கு யாரு சோறு போடறது? வந்து வேலை செய். குறைஞ்சபட்சம் சுத்தியிருக்கிற செடிகளுக்காவது தண்ணியை ஊத்து. உழைக்காம சாப்பிடணும், எல்லாராலயும் மதிக்கப்படணுங்கிறதுக்காக வேஷத்தை போட்டுட்டு நீங்க எங்களை ஏமாத்தறீங்க. இன்னும் எத்தனை காலத்துக்குப் பொறுத்திட்டிருக்கிறது இந்த ஏமாத்து வேலையை?
இந்து மதம்னா என்ன, அது இங்க இருந்ததா, அது வெள்ளைக்காரன் எழுதினது. வெள்ளைக்காரன் நிர்வகிக்கும்போது இங்க இருக்கிற குறுநிலங்களை எல்லாம் ஒருங்கிணைச்சு அவன் தான் இந்தியான்னு பேர் வைக்கிறான். இந்தியாவில் உள்ள கிறித்தவன், இஸ்லாமியன், பார்சி போக மீதியுள்ளவன் இந்துன்னு அவன் தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில எழுதினான். அதுக்கு முன்னாடி இந்தியாவுலே மதம் இருந்தது. புத்தமதத்தை புத்தர் தோற்றுவிச்சார். அந்த மாபெரும் மேதையை அடிச்சு விரட்டுன ஒரு பாவத்துக்காவது இந்த இந்து மதம் அழிஞ்சு போகட்டுங்கிறேன் நான்.
என் மண்ணில் தோன்றிய ஒரு மாபெரும் ஞானியை நீங்க துரத்திட்டீங்க. இன்னிக்கு இலங்கையிலயும், சிங்கப்பூர்லயும் புத்தர் இருக்கிறார். ஒலிம்பிக்கில் தங்கத்தை வாங்கிக் குவிக்கறான் அவன். அவனோட ஓடமுடியுமா உங்களால. ஏன்னா புத்த மதம் ஒழுக்கத்தை போதிக்குது, தியானம் சொல்லித் தருது, உடற்பயிற்சி கலைகளை, வீரக்கலைகளையும் பிறப்பில் இருந்து கத்துக்கச் சொல்லுது. அப்பேர்ப்பட்ட மதத்தைத் தோற்றுவித்த மகானை நாட்டை விட்டே துரத்திட்டு, பெத்லகேம்ல ஆசாரி வேலை பார்த்துட்டிருந்த இயேசுநாதரையும், அரபு நாட்டில பேரீச்சம்பழக் காட்டில ஒட்டகம் மேய்ச்சிட்டிருந்த நபிகளையும் கோவில் கட்டி கும்பிடறாங்க. என் மண்ணில் தோன்றிய புத்தமதம் உலகம் பூராவும் இருக்கு, என் மண்ணில் இல்லையே ஏன்? இவர்கள் (பார்ப்பனர்கள்) செய்த சதி. அவன் கடவுள் இல்லைன்னு போதிச்சான், அறிவே கடவுள்னு சொன்னான். அய்யய்யோ நம்ம பொழைப்புக்கு வேட்டு வைக்கிறான்னேன்னு பயந்துட்டு அவன் மதத்தை இந்தியாவிலே இருந்தே துரத்திட்டாங்க.
சும்மா இந்து, இந்துன்னு குதிக்கக்கூடாது. சரி இருக்கட்டும். மதம் மாறின எல்லாரையும் மறுபடியும் இந்து மதத்துக்கே கூட்டிட்டு வருவோம். நீ எந்தச் சாதியில சேர்த்துப்ப? அப்பவும் தலித்தாத்தானே இருப்பான். அந்த மயித்துக்கு அவன் அங்கேயே இருந்துட்டுப் போகட்டுமே. உனக்கு இதில என்னப் பிரச்சனை? ஓட்டுப் போயிடும். அதுதானே காரணம்.
http://www.keetru.com/literature/interview/seemaan.php
Wednesday, October 21, 2009
உன்னைப் (??!!??) போல் ஒருவன்
Real Names
Character Names (Police)
Character Names (Terrorists)
Music
Lyrics
Singers
My comments.... hehehe
எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் ஏதாவது ஒன்றை பற்றி உங்களுக்கு நினைவு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.
- Kamal Haasan
- Lakshmi
- Shruti Haasan
- Anuja Iyer
- Ganesh Venkatraman
- Bombay Jayashree
Character Names (Police)
- Raghavan Maraar
- Sethuraman
Character Names (Terrorists)
- Abdullah
- Inayadullah
- Ahamadullah and
- Karamchand Lala
Music
- Shruti Haasan (Kamal's daughter)
Lyrics
- Kamal Haasan (3)
- Manyusha Puthran (1)
Singers
- Kamal Haasan (3)
- Shruti Haasan (2)
- Bombay Jayashree (1)
- Akshara Haasan, Subbalakshmi, Krishnan Swaminathan & (Bala, Mira, Tara, Aiden, Satish, Leo)
My comments.... hehehe
எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் ஏதாவது ஒன்றை பற்றி உங்களுக்கு நினைவு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.
சேட்டன்களின் சேட்டை
30 மாநிலங்களையும், 3 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட மத்திய அரசின் செயலகங்களா? அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகமா? என்று பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு, இன்றைக்கு டெல்லியில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் நிரம்பி வழிகிறார்கள்.
இந்தியாவா? அல்லது கேரள தேசமா? என்று எண்ணும் அளவுக்கு மலையாள மொழி பேசுகிற கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் சட்டத்தின்படி நாட்டின் முதல்குடிமகனாக விளங்குபவர் குடியரசு தலைவர். இப்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபா பட்டிலுக்கு செயலாளராக இருப்பவர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், பதவியிலிருந்து ஓய்வு பெறும் வயதை தாண்டிய இவருக்கு 4 ஆண்டுகள் பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டு பிரதீபா பட்டில் பதவியில் இருக்கும் வரையில், இவரும் செயலாளராக பதவியில் நீடிப்பார் என்ற நிலமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.
குடியரசு தலைவருக்கு அடுத்ததாக ஆட்சி தலைவராக இருப்பவர் பிரதமர். பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக இருப்பவர் டி.கே. நாயர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விளக்கத் தேவையில்லை.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், ஆட்சியை வழி நடத்திச் செல்பவராகவும் விளங்கி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செயலாளராக இருப்பவர் வின்சென்ட் ஜார்ஜ். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
மாநிலங்களில் எப்படி தலைமைச் செயலாளர் பதவி இருக்கிறதோ, அதைப் போன்று மத்தியில் இருப்பது அமைச்சரவைச் செயலாளர் பதவி. இப்போது அமைச்சரவை செயலாளராக இருப்பவர் கே.எம். சந்திரசேகர், இவருக்கு அடுத்தபடியாக உள்துறை செயலாளராக இருப்பவர் சி.கே. பிள்ளை. செல்வாக்கும், அதிகாரமும் மிக்க இருவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள்.
வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா மேனன் ராவ், தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ், விவசாயம் மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் நந்தகுமார், சிவில் விமானப் போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார்,
செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ரகு மேனன், நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ராமச்சந்திரன், ஜவுளிச் துறை செயலாளர் ரீட்டா மேனன், கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் கங்காதரன்,
குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழி பேசுகிற அதிகாரிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் எம்.கே.நாராயணன் நாயர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் மாதவன் நாயர் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.
தமிழ்நாட்டிலிருந்தும் 2 அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு போயிருக்கிறார்கள். அந்த இருவரும் கூட கேரளாவை சொந்த மாநிலமாகக் கொண்டவர்கள் தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு அதிகாரி தான் இப்போது மத்திய அரசில் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.
மத்தியில் இணை அமைச்சராக இருக்கும் ஒருவர் (ஜெய்ராம் ரமேஷ்) மிகத் துணிச்சலாக தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் மதிக்காமல், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரளாவிற்கு அனுமதி அளிக்கிறார் என்றால், அந்தத் துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது?.
மத்தியில் ஆளுகின்ற கூட்டணி ஆட்சியில் முக்கியக் கூட்டணிக் கட்சி ஆட்சி நடத்துகின்ற தமிழகத்திற்கு பாதகமாகவும், எதிர்க்கட்சி ஆட்சி நடக்கிற கேரளத்திற்குச் சாதகமாகவும் முடிவெடுக்கும் துணிச்சலை அவருக்கு கொடுத்தது யார்?.
அவர் வெறும் பொம்மை தான். அவருக்கு சாவி கொடுத்து செயல்பட வைத்திருப்பவர்கள் யார்? என்பதை துணிந்து அறிவிக்க முதல்வர் முன்வர வேண்டும்.
http://thatstamil.oneindia.in/news/2009/10/21/tn-malayalis-are-ruling-the-nation-says-ramdoss.html
இந்தியாவா? அல்லது கேரள தேசமா? என்று எண்ணும் அளவுக்கு மலையாள மொழி பேசுகிற கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் சட்டத்தின்படி நாட்டின் முதல்குடிமகனாக விளங்குபவர் குடியரசு தலைவர். இப்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபா பட்டிலுக்கு செயலாளராக இருப்பவர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், பதவியிலிருந்து ஓய்வு பெறும் வயதை தாண்டிய இவருக்கு 4 ஆண்டுகள் பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டு பிரதீபா பட்டில் பதவியில் இருக்கும் வரையில், இவரும் செயலாளராக பதவியில் நீடிப்பார் என்ற நிலமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.
குடியரசு தலைவருக்கு அடுத்ததாக ஆட்சி தலைவராக இருப்பவர் பிரதமர். பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக இருப்பவர் டி.கே. நாயர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விளக்கத் தேவையில்லை.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், ஆட்சியை வழி நடத்திச் செல்பவராகவும் விளங்கி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செயலாளராக இருப்பவர் வின்சென்ட் ஜார்ஜ். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
மாநிலங்களில் எப்படி தலைமைச் செயலாளர் பதவி இருக்கிறதோ, அதைப் போன்று மத்தியில் இருப்பது அமைச்சரவைச் செயலாளர் பதவி. இப்போது அமைச்சரவை செயலாளராக இருப்பவர் கே.எம். சந்திரசேகர், இவருக்கு அடுத்தபடியாக உள்துறை செயலாளராக இருப்பவர் சி.கே. பிள்ளை. செல்வாக்கும், அதிகாரமும் மிக்க இருவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள்.
வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா மேனன் ராவ், தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ், விவசாயம் மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் நந்தகுமார், சிவில் விமானப் போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார்,
செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ரகு மேனன், நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ராமச்சந்திரன், ஜவுளிச் துறை செயலாளர் ரீட்டா மேனன், கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் கங்காதரன்,
குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழி பேசுகிற அதிகாரிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் எம்.கே.நாராயணன் நாயர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் மாதவன் நாயர் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.
தமிழ்நாட்டிலிருந்தும் 2 அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு போயிருக்கிறார்கள். அந்த இருவரும் கூட கேரளாவை சொந்த மாநிலமாகக் கொண்டவர்கள் தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு அதிகாரி தான் இப்போது மத்திய அரசில் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.
மத்தியில் இணை அமைச்சராக இருக்கும் ஒருவர் (ஜெய்ராம் ரமேஷ்) மிகத் துணிச்சலாக தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் மதிக்காமல், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரளாவிற்கு அனுமதி அளிக்கிறார் என்றால், அந்தத் துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது?.
மத்தியில் ஆளுகின்ற கூட்டணி ஆட்சியில் முக்கியக் கூட்டணிக் கட்சி ஆட்சி நடத்துகின்ற தமிழகத்திற்கு பாதகமாகவும், எதிர்க்கட்சி ஆட்சி நடக்கிற கேரளத்திற்குச் சாதகமாகவும் முடிவெடுக்கும் துணிச்சலை அவருக்கு கொடுத்தது யார்?.
அவர் வெறும் பொம்மை தான். அவருக்கு சாவி கொடுத்து செயல்பட வைத்திருப்பவர்கள் யார்? என்பதை துணிந்து அறிவிக்க முதல்வர் முன்வர வேண்டும்.
http://thatstamil.oneindia.in/news/2009/10/21/tn-malayalis-are-ruling-the-nation-says-ramdoss.html
Monday, October 12, 2009
மகாத்மா பெரியார்
13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. "விடுதலை' 20.4.1955
"உலக உத்தமர்' என்ற காந்தியாரே சூத்திரன்தான். அவரும் தன்னை அடிக்கடி "நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வார். அப்படிப்பட்ட "மகாத்மாவே' ஜாதியைப் பற்றிச் சிந்தித்தாரா? அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பச்சையாகவே ""நான் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே வந்தேன்; ராமராஜ்யத்தை நிலைநாட்டுவதே என் நோக்கம்'' என்று கூறினார். அதற்கென்று மக்களை எல்லாம் ராமபஜனை செய்யச் சொன்னார். அதனால்தான் பார்ப்பனர் எல்லாரும் கூடி, அவருக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தனர். இல்லையேல், அவர் இதுவரையாவது உயிர் வாழ்ந்திருக்க முடியாது.
நானும் "மகாத்மா' ஆக முடியும். இன்றைக்கே ""பார்ப்பனர் எல்லாரும் சாட்ஷாத் பூதேவர்கள்; மதம் அவசியம் வேண்டும், கடவுள் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அவசியம் பார்ப்பனர்கள் எல்லாக் கோயிலுக்கும் மணியாட்டத்தான் வேண்டும். இல்லையேல் உலகமே நாசமாய்ப் போய்விடும்'' என்று, இன்றைக்கு இக்கூட்டத்திலேயே பேசினால் போதுமே! உடனே தந்திமேல் தந்தி பறக்கும்; இங்குள்ள பார்ப்பனர் எல்லாரும் உடனே திரு. காமராசருக்குத் தந்தி கொடுப்பார்கள்; உடனே அவர் மத்திய அரசாங்கத்துக்கு "இங்கு இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ. ராமசாமி பக்தராகிவிட்டார். அதுவும் என்னுடைய ஆட்சியில் அவர் கொள்கைகள் மாற்றப்பட்டன'' என்று ஒரு வரி அதிகம் கொடுத்தால், உடனே எனக்கு மறுகணமே "மகாத்மா ராமசாமி' என்று கூப்பிட உத்தரவிடுவார்கள்! அங்கிருந்து ""ராமசாமிக்கு ஒரு மந்திரி வேலை வேண்டுமா? இரண்டு மந்திரி வேலை வேண்டுமா? என்று கேள்!'' என்று பதில் வரும்.
ஆனால், நான் மற்றவர்களைப் போல் எண்ணமில்லாதவனாகையால், என்னுடைய வாழ்நாளில் ஏதும் பொதுத் தொண்டினைச் செய்தாக வேண்டும் என்று, நம் திராவிட மக்களுக்கென்று இக்காரியத்தில் ஈடுபட்டு, கடந்த 30 ண்டுகளாகப் பற்பல எதிர்ப்புகளுக்கிடையிலும் கஷ்டங்களுக்கிடையிலும் துணிந்து செய்து வருகிறேன்.
"உலக உத்தமர்' என்ற காந்தியாரே சூத்திரன்தான். அவரும் தன்னை அடிக்கடி "நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வார். அப்படிப்பட்ட "மகாத்மாவே' ஜாதியைப் பற்றிச் சிந்தித்தாரா? அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பச்சையாகவே ""நான் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே வந்தேன்; ராமராஜ்யத்தை நிலைநாட்டுவதே என் நோக்கம்'' என்று கூறினார். அதற்கென்று மக்களை எல்லாம் ராமபஜனை செய்யச் சொன்னார். அதனால்தான் பார்ப்பனர் எல்லாரும் கூடி, அவருக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தனர். இல்லையேல், அவர் இதுவரையாவது உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

ஆனால், நான் மற்றவர்களைப் போல் எண்ணமில்லாதவனாகையால், என்னுடைய வாழ்நாளில் ஏதும் பொதுத் தொண்டினைச் செய்தாக வேண்டும் என்று, நம் திராவிட மக்களுக்கென்று இக்காரியத்தில் ஈடுபட்டு, கடந்த 30 ண்டுகளாகப் பற்பல எதிர்ப்புகளுக்கிடையிலும் கஷ்டங்களுக்கிடையிலும் துணிந்து செய்து வருகிறேன்.
Saturday, August 15, 2009
யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?
“யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?”
ஒரு சின்ன உதாரணம்.
இன்று இரவு எல்லாரும் தூங்கின பிறகு மழை பெய்கிறது. விடிவதற்குள் ஈரம் முழுக்கக் காய்ந்து விடுகிறது. அந்த மழை பெய்தது யாருக்காவது தெரியுமா? நேற்று மழை பெய்ததா என்று யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். அல்லது தெரியாது என்று சொல்வார்கள். அப்போது இந்த உலகத்தைப் பொறுத்த வரை அப்படி ஒரு மழையே பெய்யவில்லை.
அப்போது என்ன தெரிகிறது?
ஒரு காட்சி அங்கீகரிக்கப் பட காண்பவர்கள் தேவைப் படுகிறார்கள்.
காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்.
காண்பவன் இல்லையேல், காட்சி இல்லை.
சுதந்திரத்ததை வாங்கி யாரிடம் கொடுத்தார்கள்?
நேரு மாமா சுதந்திரம் வாங்கி தன் குடும்பத்தார் வசம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி கொடுத்தார் என்ற விபரம் இன்று தான் தெரிந்ததாக என் நண்பன் முரளி சொன்ன போது உண்மையில் அதிர்ந்து தான் போனேன்.
Thursday, March 12, 2009
நான்... கடவுள்...
கடவுளுக்கு 100 தேங்காய் உடைத்தால் தன்னை பாசாக்கி விடுவார் என்று நினைக்கும் மாணவனுக்கு ஆன்மீகவாதிகள் தரும் ஆலோசனை என்ன வென்றால், ஆண்டவன் உங்களுக்காக தேர்வெழுத மாட்டார், நீங்கள் படிக்க வேண்டும், நீங்கள் தான் தேர்வு எழுத வேண்டும்.
இது எப்படி இருக்கு...
நானே தான் படிக்க வேண்டும், நானே தான் தேர்வையும் எழுத வேண்டும். !!!!
கடவுளை வேண்டுவதால் எனக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டு நன்றாக படித்து தேருவேனாம்...
காரியம் நிறைவேற காரணம் நானாகவும் உந்து சக்தியாக கடவுளும் இருக்கும் போது இதில் யார் உன்னதமானவர் நானா? இல்லை கடவுளா?
காரியம் செய்பவனே உயர்ந்தவன் என்பது என் கருத்து... மேலும் கடவுளாக வந்து நானே உயர்ந்தவன் என்று போட்டோவுக்கு போஸ் கொடுத்ததேயில்லை என்பது கூடுதல் தகவல். :-))
இது எப்படி இருக்கு...
நானே தான் படிக்க வேண்டும், நானே தான் தேர்வையும் எழுத வேண்டும். !!!!
கடவுளை வேண்டுவதால் எனக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டு நன்றாக படித்து தேருவேனாம்...
காரியம் நிறைவேற காரணம் நானாகவும் உந்து சக்தியாக கடவுளும் இருக்கும் போது இதில் யார் உன்னதமானவர் நானா? இல்லை கடவுளா?
காரியம் செய்பவனே உயர்ந்தவன் என்பது என் கருத்து... மேலும் கடவுளாக வந்து நானே உயர்ந்தவன் என்று போட்டோவுக்கு போஸ் கொடுத்ததேயில்லை என்பது கூடுதல் தகவல். :-))
பீடிக்கு நெருப்பு வேண்டும் !!!
Monday, March 09, 2009
கல்வி தரத்தை உயர்த்த யோசனை?
தேர்தல்மூலம் மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படும் (MLA, MP, Ward Councilor, etc.) எல்லோருடைய குழந்தைகளும், பேரக் குழுந்தைகளும், கொள்ளுப் பேர குழந்தைகளும் (உண்மைதான் அவ்வளவு வயதிலும் பிரதிநிதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்) கண்டிப்பாக அரசாங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தான் கற்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.
அந்த சட்டத்தில் எந்த exception களும், விதிமுறை தளர்தலும், ஓட்டைகளும் இருக்ககூடாது.
இந்த சட்டத்தை மீறும் எவர் பற்றியும் ஆதாரத்தோடு தேர்தல் கமிசனுக்கு ஒரு கடிதம் போட்டால் உடனடியாக அவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு வரும் புகார்கள் 1 மாதத்திற்குள் முடிவெடுக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கையை எந்த கட்சி ஏற்றுக் கொள்கிறதோ அந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை முதல் கட்டமாக எல்லா வாக்காளர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.
எப்படி இருக்கு என் யோசனை? பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்!!!
அந்த சட்டத்தில் எந்த exception களும், விதிமுறை தளர்தலும், ஓட்டைகளும் இருக்ககூடாது.
இந்த சட்டத்தை மீறும் எவர் பற்றியும் ஆதாரத்தோடு தேர்தல் கமிசனுக்கு ஒரு கடிதம் போட்டால் உடனடியாக அவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு வரும் புகார்கள் 1 மாதத்திற்குள் முடிவெடுக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கையை எந்த கட்சி ஏற்றுக் கொள்கிறதோ அந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை முதல் கட்டமாக எல்லா வாக்காளர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.
எப்படி இருக்கு என் யோசனை? பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்!!!
Saturday, January 24, 2009
காலக் கொடுமை
- அதிமுக ஆட்சியை பிடித்தது
- செல்வகணபதி உள்ளாட்சி அமைச்சர்
- கலர் டிவி ஊழல்
- அதிமுக தேர்தலில் தோல்வி; திமுக வெற்றி
- செல்வகணபதி திமுகவில் இணைந்தார்
- கலர் டிவி ஊழலில் செல்வகணபதி விடுவிக்கப்பட்டார்
செய்தி தாளில் படித்த தலைப்புகளை கால வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளன. அதை வைத்து எடுக்கப்படும் முடிவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
Sunday, January 11, 2009
தமிழ் சொற்கள்
சில ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் சொற்கள்
- Wind Mill - காற்றாலை
- Chief Minister - முதலமைச்சர்
- Inspector - ஆய்வாளர்
- Conductor - நடத்துனர்
- Bus Stop - பேருந்து நிறுத்தம்
- Browser - உலாவி
- Website - இணையதளம்
- eMail - மின்னஞ்சல்
- Wire - கம்பி
- Ambassador - தூதுவர்
- Management - மேலாண்மை
- Snacks - நொறுக்குத்தீனி
- Personality - தோற்றப்பொலிவு
- Ego - அகந்தை
- Cell Phone - அலைபேசி
- Internet - இணையம்
- Dictionary - அகராதி
- Photo - புகைப்படம்
- Xerox - நகல்
- Kids - மழழையர்
கடவுள் என்றால்?
இறைவன் உலகத்தை படைத்தான் என்றால்
இடையினில் எல்லைகள் எதற்காக?
கடவுள் நம்மை காப்பான் என்றால்
காவல் ராணுவம் எதற்காக?
தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்றால்
துப்பாக்கி ரவையிலும் இருப்பானா?
அனைத்தும் அறிந்தவன் ஆண்டவன் என்றால்
நாங்கள் அல்லல்படுவதை அறிவானா?
சகலமும் படைத்தது அவன்தான் என்றால்
சாதியும் மதமும் படைப்பானா? அதில் சண்டைகள் வருவதை பொறுப்பானா?
பலபல நோவும் பட்டினி சாவும் பரமன் அவனின் செயல்தானா?
இந்த கொடுமையை அவனும் செய்வானா?
இடையினில் எல்லைகள் எதற்காக?
கடவுள் நம்மை காப்பான் என்றால்
காவல் ராணுவம் எதற்காக?
தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்றால்
துப்பாக்கி ரவையிலும் இருப்பானா?
அனைத்தும் அறிந்தவன் ஆண்டவன் என்றால்
நாங்கள் அல்லல்படுவதை அறிவானா?
சகலமும் படைத்தது அவன்தான் என்றால்
சாதியும் மதமும் படைப்பானா? அதில் சண்டைகள் வருவதை பொறுப்பானா?
பலபல நோவும் பட்டினி சாவும் பரமன் அவனின் செயல்தானா?
இந்த கொடுமையை அவனும் செய்வானா?
தமிழ் பொது அறிவு (!!???)
1) தமிழ் எந்தந்த நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது?
2) மெய்யெழுத்துகளை வரிசை கிரமமாக எழுதுக
3) தமிழ்தாய் பாடலை எழுதியவர் யார்?
4) ஜல்லிக்கட்டு நடக்கும் 4 ஊர்களின் பெயர்களை எழுதுக.
5) இராமயணத்தில் இலங்கைக்கு பாலம் அமைக்க உதவிய இனம் எது?
6) யாரை கேட்டு "ஜனகனமன"-வை தேசிய கீதமாக வைத்தனர்?
7) இலங்கையில் தமிழர்கள் குடியேறியவர்களா? பழங்குடிகளா?
8) திருகுறளில் எத்தனை பாடல்கள் உள்ளன? எந்த பாலில் அதிகமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன?
9) தமிழ் மாதங்களின் பெயர்களை எழுதுக.
10) தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர் யார்?
2) மெய்யெழுத்துகளை வரிசை கிரமமாக எழுதுக
3) தமிழ்தாய் பாடலை எழுதியவர் யார்?
4) ஜல்லிக்கட்டு நடக்கும் 4 ஊர்களின் பெயர்களை எழுதுக.
5) இராமயணத்தில் இலங்கைக்கு பாலம் அமைக்க உதவிய இனம் எது?
6) யாரை கேட்டு "ஜனகனமன"-வை தேசிய கீதமாக வைத்தனர்?
7) இலங்கையில் தமிழர்கள் குடியேறியவர்களா? பழங்குடிகளா?
8) திருகுறளில் எத்தனை பாடல்கள் உள்ளன? எந்த பாலில் அதிகமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன?
9) தமிழ் மாதங்களின் பெயர்களை எழுதுக.
10) தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர் யார்?
தமிழில் கலந்த பிறமொழி வார்த்தைகள்
- யுத்தம் - போர்
- சுதந்திரம் - விடுதலை
- தினம் - நாள்
- சந்தோசம் - மகிழ்ச்சி
- சாதம் - சோறு
- ரசம் - சாறு
- சம்பவம் - நிகழ்ச்சி
- சம்பந்தம் - தொடர்பு
- பிரபலம் - புகழ்
- பிரத்தியேகம் - சிறப்பு
- முக்கியம் - முதன்மை
- சப்தம் - ஓசை
- தயார் - ஆயத்தம்
- சுகம் - இன்பம்
- வியாபாரம் - வாணிகம்
- ராத்திரி - இரவு
- மாமூல் - வழக்கம்
- நிஜம் - உண்மை
- யோசி - சிந்தி
- புத்தி - அறிவு
- புத்தகம் - நூல்
- மைதானம் - திடல்
- சுத்தம் - தூய்மை
- அனுமதி - உத்திரவு
- ஜாமீன் - பிணை
- சுலபம் - எளிமை
- சேவை - தொண்டு
- சர்ச்சை - விவாதம்
- சாவி - திறவுகோல்
- நகர் - பட்டினம்
- கோவில் - ஆலயம்
Subscribe to:
Posts (Atom)